அரூர், மே.18:
அரூர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அச்சல்வாடி, சந்தப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையாம்பட்டி, நாதியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்படும்.
மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)