அரூர் – ஏப்ரல் 09:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, அரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சண்முகம் அறிமுக கூட்டம் அரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு வேட்பாளர் சண்முகத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலச் சாதனைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மேலும், வரும் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

