அரூர் – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, அரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வே. சம்பத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவை சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் திரு. டி.ஆர். அன்பழகன், அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திரு. ஆர்.ஆர். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

