தருமபுரி – ஏப்ரல் 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்ற பெரும் ஊர்வலம் தருமபுரி நகரில் நடைபெற்றது. கட்சி கொடிகள், முழக்கங்கள், மேளதாளம் ஆகியவற்றுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
பின்னர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த சௌமியா அன்புமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி காயத்ரி அவர்களிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

