தருமபுரி – ஏப்ரல் 13:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மேற்கொண்ட தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3,43,810 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12.04.2026 மாலை 6.00 மணி முதல் 13.04.2026 மாலை 6.00 மணி வரை நடைபெற்ற சோதனையில் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியான விவரம்:
- பாலக்கோடு (57)
- வழக்குகள்: 3
- ரொக்கப்பணம்: ₹1,58,900
- இலவச பொருட்கள் (TVK துண்டுகள், விசில், நோட்டீஸ், ஸ்டிக்கர்கள்): ₹15,445
- மொத்தம்: ₹1,74,345
- பென்னாகரம் (58)
- பறிமுதல்: இல்லை
- தருமபுரி (59)
- வழக்குகள்: 1
- ரொக்கப்பணம்: ₹1,11,000
- பாப்பிரெட்டிப்பட்டி (60)
- வழக்குகள்: 1
- ரொக்கப்பணம்: ₹55,000
- அரூர் (61 – தனி)
- வழக்குகள்: 1
- மதுபானம்: 4.86 லிட்டர் (₹3,265)
மொத்த நிலவரம்:
- வழக்குகள்: 6
- ரொக்கப்பணம்: ₹3,24,900
- மதுபானம்: ₹3,265
- இலவச பொருட்கள்: ₹15,445
- மொத்த பறிமுதல்: ₹3,43,810
தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)