Type Here to Get Search Results !

அரூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயற்குழு கூட்டம் – தேர்தல் பணிக்கு தீவிர முடிவு.


தருமபுரி – மார்ச் 26:


தருமபுரி கிழக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் அரூரில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட அவை தலைவர் பி.எம். இளங்கோ முன்னிலையில், மாவட்ட செயலாளர் கே.பி. இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. செந்தில்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கிய திமுகவிற்கு நன்றி தெரிவிப்பது, மேலும் தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்வது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுபாஷ், தலைமை நிலைய செயலாளர் நரசிம்மன், இளைஞர் அணி செயலாளர் சங்கர், விவசாய அணி செயலாளர் அருள், மாவட்ட துணை செயலாளர் சீனன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அரூர் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.


கூட்டத்தின் முடிவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ். வடிவேல் நன்றி தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies