தருமபுரி - மார்ச். 22:
தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மாநில புகார் எண்ணில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
முகமது அலி கிளப் ரோடு, சின்னசாமி தெரு, சேலம் மெயின் ரோடு (அரசு மருத்துவ கல்லூரி அருகில்), பாரதிபுரம், செந்தில் நகர், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் சோதனை நடைபெற்றது.
ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்:
- சில உணவகங்களில் டைனிங் டேபிள்களில் பூச்சி தொல்லை காணப்பட்டது.
- சமைத்த இறைச்சி தவறான முறையில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டது.
- செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பணியாளர்கள் தலைக்கவசம் மற்றும் ஏப்ரான் அணியாமல் இருந்தனர்.
- திறந்த நிலையில் கழிவு தொட்டிகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
- அயோடின் இல்லாத உப்பு பயன்படுத்தப்பட்டது.
- சுகாதாரமற்ற சூழல் மற்றும் எலி தொல்லை காணப்பட்டது.
- நடைபாதையில் உணவு தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
- விதிமுறைகள் மீறிய உணவகங்களுக்கு ₹1000 முதல் ₹2000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
- சமைத்த உணவுகள் மற்றும் சந்தேக உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- உணவு மாதிரிகள் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டன.
- சுகாதார குறைபாடுகளை சரிசெய்ய குறிப்பிட்ட கால அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட RUCO டீலர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

