இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது: ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃபுளுரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 450, 400 மற்றும் 250 மி.மீ விட்டம் கொண்ட வார்ப்பிரும்பு பிரதான குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக 10.03.2026 மற்றும் 11.03.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரூர் நகராட்சி மற்றும் 32 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே, பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களுக்கு தேவையான அளவு ஒகேனக்கல் குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் கிடைக்கும் நீரை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #HogenakkalWater #DrinkingWater #Arur #WaterSupply #TamilNews #LocalNews
.gif)

.jpg)