Type Here to Get Search Results !

தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி: “கிடப்பில் உள்ள திட்டங்கள் நிறைவேறும்” என உறுதி.


தருமபுரி, மார்ச். 31: 


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று தொகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பாலக்கோடு தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு வலுப்படுத்தல், பூத் வாரியான அமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள், குறிப்பாக சிப்காட் தொழிற்சாலை போன்றவை திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து முக்கிய திட்டங்களும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies