தருமபுரி, மார்ச். 31
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 30.03.2026 காலை 6.00 மணி முதல் 31.03.2026 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மொத்தம் ₹1,18,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
- பாலக்கோடு (57) தொகுதியில் ₹66,500
- பாப்பிரெட்டிப்பட்டி (60) தொகுதியில் ₹51,700பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மற்ற தொகுதிகளான பென்னாகரம் (58), தருமபுரி (59), ஹரூர் (61) ஆகிய இடங்களில் பணம் அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.
மேலும், மதுபானம், போதைப்பொருட்கள், மதிப்புள்ள உலோகங்கள் மற்றும் இலவசப் பொருட்கள் உள்ளிட்டவை எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலப்பகுதியில் எந்த FIR-மும் பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

