Type Here to Get Search Results !

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: தருமபுரியில் வேட்புமனு தாக்கல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மார்ச் 27:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் செயல்முறை குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தலைமை வகித்தார்.


இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 30.03.2026 முதல் 06.04.2026 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 31.03.2026, 01.04.2026, 03.04.2026 மற்றும் 05.04.2026 ஆகிய விடுமுறை நாட்களைத் தவிர்த்து, தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.


மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளருடன் அதிகபட்சமாக நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். (வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டும் 100 மீட்டர் எல்லைக்குள் அனுமதி). வேட்புமனு தாக்கல் செயல்முறை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


அத்துடன், மனு தாக்கல் செயல்முறையின் போது தேவையற்ற உரையாடல்கள் அல்லது விவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சோமசுந்தரம், ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies