நல்லம்பள்ளி | பிப்ரவரி 06:
தருமபுரி கிழக்கு மாவட்டம், தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் – பாலஜங்கமானஅள்ளி ஊராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊராட்சியில்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மற்றும் ஆ. மணி எம்.பி. கலந்து கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும், தருமபுரி முன்னாள் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் மற்றும் தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வரும் தேர்தலை முன்னிட்டு ஊராட்சி வாரியாக செய்ய வேண்டிய பணிகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
.gif)

.jpg)