தருமபுரி | பிப்ரவரி 09:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி KPJ மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்ட தொடக்க நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். பின்னர், தருமபுரி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும், காலை உணவு பெறுவதற்கான டிபன் பாக்ஸ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியிலும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, டிபன் பாக்ஸ்களை வழங்கினார்.
.gif)

.jpg)