தருமபுரி, பிப். 08:
தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலையில் இன்று (08.02.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து மற்றும் பயண சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக நான்கு முக்கிய சந்திப்புகளில் (நான்கு இடங்களில்) போக்குவரத்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு தற்காலிக இடைமாற்று (Interchange) ஏற்பாடுகள் செய்யப்படும்.
நாளை (09.02.2026) முதல்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- அரூர்
- பாப்பிரெட்டிப்பட்டி
- பொம்மிடி
- மத்தூர்
மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும்.
பேருந்து கட்டணத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். தற்காலிக கட்டண உயர்வு இல்லை என தெளிவுபடுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கு தேவையான தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் இடைமாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எ.பி. சிவகாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மாவட்ட போக்குவரத்து அலுவலர் க. செல்வம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் முழுமையாக செயல்படும் வரை, பொதுமக்களின் தினசரி பயணம் பாதிக்கப்படாத வகையில் தற்காலிக தீர்வுகள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
.gif)

