தருமபுரி, பிப். 18:
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNRLM) கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்நிலையில்,
-
வயது வரம்பு 30 இலிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
-
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 20.02.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதி
-
ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Graduate in any discipline)
-
MS Office-ல் குறைந்தது 3 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்அல்லது
-
கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
மேலும், சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் பணி திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது மற்றும் அனுபவம்
-
35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
-
சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்
-
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
முக்கிய நிபந்தனைகள்
-
காலிப்பணியிடம் உள்ள வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
-
நிர்வாக நிதி முறைகேடு அல்லது பிற காரணங்களால் முந்தைய
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
-
புது வாழ்வுத் திட்டம்
-
IFAD திட்டம்
-
பிற மாநில அரசுத் திட்டங்கள்
-
இவற்றிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கும் முகவரி
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். தகுதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
.gif)

.jpg)