தருமபுரி, ஜன.12:
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் கல்வித் தகுதி அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
💰 உதவித்தொகை விவரம்:
-
10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் – ரூ.200
-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் – ரூ.300
-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் – ரூ.400
-
பட்டதாரிகள் – ரூ.600
மாற்றுத்திறனாளிகளுக்கு :
-
10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் – ரூ.600
-
12ம் வகுப்பு – ரூ.750
-
பட்டதாரிகள் – ரூ.1000
இந்த திட்டத்தின் 31.03.2026 அன்று முடிவடையும் காலாண்டிற்காக தகுதியுடைய பதிவுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
📌 தகுதிகள்:
-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்
-
மாற்றுத்திறனாளிகள் – பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்
-
வயது வரம்பு (01.01.2026 அன்று):
-
பட்டியலின பிரிவினர் – 45 வயதிற்குள்
-
இதர பிரிவினர் – 40 வயதிற்குள்
-
-
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000/-க்கு மிகையாமல் இருக்க வேண்டும்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது/வருமான வரம்பு இல்லை
-
பள்ளி/கல்லூரியில் நேரடியாக பயிலும் மாணவர்கள் தகுதியற்றவர்கள் (அஞ்சல் வழிக் கல்வி அனுமதி)
📝 விண்ணப்பிக்கும் முறை:
முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்புவோர்,
-
விண்ணப்பப் படிவத்தை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று
-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகம் மற்றும் தேவையான சான்றுகளுடன்
-
25.02.2026க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று, மூன்றாண்டு நிறைவடையாமல் சுய உறுதிமொழி அளிக்காதவர்கள், 27.02.2026க்குள் அதனை வழங்கி தொடர்ந்து உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)