Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் பெற; இணையவழி பதிவு சிறப்பு முகாம். - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜன.12:


தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டிற்கான இலவச பஸ்பாஸ் வழங்குவதற்காக இணையவழி பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று முதல் 31.01.2026 வரை (அரசு விடுமுறை தினங்கள் தவிர) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு ஆணைப்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயமாக இணையவழி பதிவு செய்ய வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

  • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை

  • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை

  • ஆதார் அட்டை

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.


இதர மாற்றுத்திறனாளிகள் மேலதிகமாக,

  • கல்வி பயிலும் சான்று அல்லது

  • பணிபுரியும் சான்று அல்லது

  • தொடர் மருத்துவ சிகிச்சை சான்று
    என ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.


தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முகாமில் கலந்து கொண்டு, இணையவழி பஸ்பாஸ் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies