தருமபுரி, ஜன.12:
2026–2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் அல்லது கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
🔹 விண்ணப்பிக்கும் முறை
ஜனவரி 2026 முதல் skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026–2027 கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளிக்கு ஒரு இணையவழி விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கான விவரங்களும் ஒரே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
🔹 கட்டண விவரம்
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.5,000/-
ஆய்வு கட்டணம்: ரூ.8,000/-
கட்டணங்கள் RTGS / NEFT மூலம் செலுத்த வேண்டும்.
🔹 முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2026
இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
🔹 கூடுதல் தகவல்
அங்கீகாரம் தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுரைகளை
skilltraining.tn.gov.in
- என்ற முகவரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள தொழிற்பள்ளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

.jpg)