Type Here to Get Search Results !

சாமண்டஹள்ளி அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டது.


மொரப்பூர், ஜன.05:


தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாமண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினார். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் சரியான நேரத்தில் கிடைப்பது முக்கியம் என்றும், இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் கணேசன், வட்டார கல்வி அலுவலர் திருமதி உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் பெ. சாரதா, உதவி ஆசிரியர்கள் ரா. ஆதிமூலம், சி. உஷாராணி, ரா. கோவிந்தராஜ், மு. பூமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அரசு வழங்கும் கல்வி நலத்திட்டங்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies