பாலக்கோடு, ஜன.06:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக மனு அளித்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலைபேசி மூலம் நேரடியாக தொடர்புகொண்டு, அந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மனுக்களின் நிலை குறித்து பொதுமக்களிடம் நேரடி பின்னூட்டம் பெற்றதுடன், துறை அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகப் பதிவேடுகள், இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள், பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறை சேவைகள் குறித்த ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள், வருவாய் கிராமங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் விளக்கமாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் காலதாமதமின்றி தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

.jpg)