தருமபுரி, ஜன.06:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், உயிரிழந்த நபரின் அடையாளம், உறவினர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் ஆதரவற்ற நிலையில் இருந்தது. இதனை அறிந்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் மனிதநேயத்துடன் முன்வந்து இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். திருப்பத்தூர் காவல் நிலைய காவலர் பிரபு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு மூலம் இதுவரை 186 ஆதரவற்ற புனித உடல்கள் அடையாளம் காணப்பட்டு அல்லது உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். சமூகத்தில் ஆதரவற்றவர்களுக்கான இந்த மனிதநேய சேவை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

.jpg)