தருமபுரி – ஜன. 08:
தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் “International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம், கோயம்புத்தூர் நகரில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைவதில் ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில்
கருத்தரங்குகள் (Conference)
கண்காட்சி (Exhibition)
வாங்குபவர் – விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets)
அழகுநயப்பு காட்சி (Fashion Show)
ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட பெரிய அளவிலான கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் 13.01.2026க்குள் ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் வளர்ச்சி மேலும் வேகமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை,
1A–2/1 சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம் – 636006
தொலைபேசி : 0427-2913006
இந்த கண்காட்சியில்
Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamil Nadu, Technical Textiles, Sustainability & Recycling, Raw Material / Recycled Textile / Man-Made Fibre
ஆகிய பிரிவுகள் இடம்பெற உள்ளதால், அனைத்து ஜவுளித் தொழில் முனைவோர்கள் மற்றும் சங்கங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

