Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே அடிப்படை வசதி கோரி மலைவாழ் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.


பென்னாகரம், மார்ச். 03:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோட்டூர் மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அடிப்படை வசதிகள் கோரி இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 300 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த மலை கிராம மக்களுக்கு முழுமையான சாலை வசதி இல்லை என்றும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


தேர்தல் கால போக்குவரத்து சிக்கல்

கடந்த காலங்களில் தேர்தல் நடைபெறும் போது, இந்த கிராமத்திற்கு கழுதைகளின் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக டிராக்டர் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுவே அந்தப் பகுதியின் போக்குவரத்து வசதி பற்றிய நிலையை வெளிப்படுத்துவதாக அவர்கள் கூறினர்.


BDO அலுவலகம் அருகே மறியல்

நீண்டநாள் கோரிக்கைகள் தீர்க்கப்படாததை கண்டித்து, பென்னாகரம் BDO அலுவலகம் அருகே தருமபுரி–பென்னாகரம்–ஒகேனக்கல் சாலையில் சுமார் இரண்டு மணி நேரமாக சாலை மறியல் நடைபெற்றது. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட போக்குவரத்து வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும் திண்டாடி வருவதாக மலை கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர். தேர்தல் நேரங்களில் மட்டுமே வாக்குறுதிகள் வழங்கி, பின்னர் கவனிக்காமல் விடப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சாலை மறியலால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies