Type Here to Get Search Results !

தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா: 86 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


தருமபுரி, ஜன. 29 :


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், இன்று (28.01.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்த முகாம், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. Maheswaran அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) N. Balasubramaniyam மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K. Sridharan ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.


இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட 86 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், இன்றைய முகாமில் புதிதாக 35 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்தது.


இந்த குறை தீர்க்கும் முகாம் மூலம், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு கிடைத்ததாக திருப்தி தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies