தருமபுரி, ஜன. 23:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களை தடுப்பதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு Mobile Data Terminal (MDT) Device, ஒலிப்பெருக்கி, வாக்கி-டாக்கி மற்றும் சைரன் வசதிகளுடன் கூடிய 9 இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ரோந்து வாகனங்களை, கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹதிமணி, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், B.Com., BL., அவர்கள் இன்று (23.01.2026) தக்க அறிவுரைகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) N.பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) K.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். புதியதாக வழங்கப்பட்ட இந்த இருசக்கர வாகனங்கள், Dedicated Beat (அர்ப்பணிப்பு) ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இவ்வாகனங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும், அவசர உதவி எண் 100 மூலம் பெறப்படும் புகார்கள் தொடர்பாக, அர்ப்பணிப்பு ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். எதிர்வரும் காலங்களில், இத்தகைய அர்ப்பணிப்பு ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையும், ரோந்து பணிகளும் மேலும் விரிவுபடுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

.jpg)