Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா – ஜனவரி 8-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.


தருமபுரி, ஜன.02:

தருமபுரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், புத்தமதத்தினர், பாரசீகர்கள், சமணர்கள் (ஜெயின்) மற்றும் சீக்கியர்கள் ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், சிறுபான்மையினருக்காக அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, வரும் 08.01.2026 அன்று மாலை 4.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.


இக்கூட்டத்தில், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை மேலும் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies