தருமபுரி, ஜன. 02:
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் இறகுப்பந்து போட்டிகள் அண்மையில் திருச்செங்கோட்டில் உள்ள KSR கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவர் இறகுப்பந்து அணி பங்கேற்று நான்காம் இடத்தைப் பெற்றது.
இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தருமபுரி அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ். தீபக் விக்னேஷ், பல்கலைக்கழக ஆடவர் இறகுப்பந்து அணி தேர்வுக்குழுவால் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அவர், வருகின்ற 03.01.2026 முதல் 06.01.2026 வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள KL பல்கலைக்கழகம்-யில் நடைபெறும் தென் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக, பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் கே. வெங்கடாசலம் அவர்கள் இறகுப்பந்து அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேர்வு கடிதத்தினை மாணவர் எஸ். தீபக் விக்னேஷுக்கு வழங்கி, கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)