தருமபுரி, ஜன. 20:
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக எடுத்துக் கூறி பயனடையலாம்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் விரைவாக வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

.jpg)