Type Here to Get Search Results !

முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம்”, இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஜன. 09:


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம்” என்ற தலைப்பில், ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், 01.01.1991 முதல் 31.12.2009 வரை பிறந்த 16 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்-வீராங்கனைகளுக்காக ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 22.01.2026 முதல் 25.01.2026 வரை நடைபெறவுள்ளன.


ஊராட்சி ஒன்றிய அளவில்:

  • தடகளம் (100 மீ), குண்டு எறிதல் – இருபாலருக்கும்

  • கபாடி, வாலிபால் – இருபாலருக்கும்

  • கேரம் (இரட்டையர்), கயிறு இழுத்தல் – இருபாலருக்கும்

  • தெரு கிரிக்கெட் – ஆண்களுக்கு மட்டும்

  • எறிபந்து – பெண்களுக்கு மட்டும்


என்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.


30.01.2026 முதல் 01.02.2026 வரை நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில், ஓவியம், கோலப்போட்டி (ஆண்கள்-பெண்கள் இணைந்து) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீ ஓட்டப்பந்தயம் (கை, கால், பார்வை, அறிவுசார், காது கேளாதோர்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாவட்ட அளவில் ஆண்களுக்கான தெரு கிரிக்கெட் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுவர்.


பரிசுத் தொகை விவரம்:

  • ஊராட்சி ஒன்றிய அளவு:

    • முதல் பரிசு – ரூ.3,000

    • இரண்டாம் பரிசு – ரூ.2,000

    • மூன்றாம் பரிசு – ரூ.1,000

  • மாவட்ட அளவு:

    • முதல் பரிசு – ரூ.6,000

    • இரண்டாம் பரிசு – ரூ.4,000

    • மூன்றாம் பரிசு – ரூ.2,000

  • மாநில அளவு:

    • முதல் பரிசு – ரூ.75,000

    • இரண்டாம் பரிசு – ரூ.50,000

    • மூன்றாம் பரிசு – ரூ.25,000


ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கனைகள், தங்கள் சொந்த ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு வீரர் அல்லது வீராங்கனை, தடகளத்தில் அதிகபட்சம் 2 ஈவெண்ட்கள் மற்றும் 2 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.


விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்-வீராங்கனைகள் https://cmyouthfestival.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற இணையதளங்களில் 07.01.2026 முதல் 21.01.2026 வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இணையதளத்தில் பதிவு செய்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies