Type Here to Get Search Results !

அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அரூர், ஜன. 22:


தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அலுவலகப் பதிவேடுகள், இ-சேவை மைய செயல்பாடுகள், ஆதார் மையத்தின் செயல்திறன், பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறை சார்ந்த சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்தார்.


மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வருவாய் கிராமங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மேலும், அலுவலக வளாகம் தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், செட்ரப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்த அவர், இப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, அரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சி. கலைச்செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies