தருமபுரி, டிச.15:
முன்னதாக 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination), நிர்வாக காரணங்களால் தற்போது 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஐதர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர் மற்றும் நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த சம்பந்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி, தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் தேர்வு நுழைவுச் சீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)