தருமபுரி, டிச.15:
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 19.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)