Type Here to Get Search Results !

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி – டிசம்பர் 11

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (OBC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC/DNC), சிறுபான்மையினர் (Minorities) பிரிவைச் சேர்ந்த மாணவ–மாணவியருக்கு PM YASASVI Postmatric Scholarship கல்வி உதவித்தொகை திட்டம் ஆண்டுதோறும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தகுதி நிபந்தனைகள்

1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் –
இளங்கலை (3 ஆண்டு) படிப்புகள்

  • OBC / MBC / DNC / Minority மாணவ–மாணவியர்கள்

  • எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

2. தொழிற்படிப்பு, முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் பிற படிப்புகள்

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஐ மீறக்கூடாது


விண்ணப்பிக்கும் முறை

2025–26 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் UMIS (University Management Information System) எண் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள Institution Nodal Officer-ஐ அணுகி, https://umis.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2025

கல்வி உதவித்தொகை தொடர்பான மேலதிக சந்தேகங்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies