Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் – பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு.


தருமபுரி – டிசம்பர் 10

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (10.12.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) திரு K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த முகாமில் முன்னதாக வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று, அனைத்துக்கும் தகுந்த தீர்வு வழங்கப்பட்டது. மேலும் இன்று மட்டுமே புதிய 53 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


பொதுமக்களின் குறைகளை உடனடியாகக் கேட்டு பரிசீலித்து தீர்வு அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த பெட்டிஷன் மேளா பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies