Type Here to Get Search Results !

தருமபுரியில் 64-வது தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி – டிசம்பர் 10:

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா காலேஜ் ஆஃப் பார்மஸி சார்பில் நடத்தப்பட்ட 64-வது தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தேசிய மருந்தியல் வாரம் ஆண்டுதோறும் மக்களுக்கு தடுப்பூசி அவசியம், மருந்தாளுநர்களின் பங்கு, சமூக சுகாதாரம் போன்ற துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது. “ஒரு ஊசி ஆயிரம் நோய்களுக்கு கவசம்”, “தடுப்பூசி எடுத்தால் பாதுகாப்பு இரட்டிப்பு”, “மருந்தாளுநர் வழிகாட்டும் போது நோயற்ற நலம் உங்கள் வசம்”, “தடுப்பூசி எடுத்திடு – குடும்ப நலன் காத்திடு” போன்ற முக்கிய செய்திகள் பேரணியில் முன்வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அவர்களால் கொடியசைத்து தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி, பழைய ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரி மாணவ–மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், ஸ்ரீ விஜய் வித்யாலயா பார்மஸி கல்லூரி தாளாளர் டி.என்.சி. மணிவண்ணன், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மருந்தாளுநர்கள் சமூக ஆரோக்கியத்தை காக்கும் முக்கிய தூண்கள் என்பதை வலியுறுத்தும் வகையில், பேரணியின் முழுவதும் தடுப்பூசி பாதுகாப்பு செய்திகளும், மருந்தியல் கல்வியின் மகத்துவமும் பரப்பப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies