Type Here to Get Search Results !

அரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சாதனை – மாவட்ட அளவிலான மாரத்தான் & கால்பந்து போட்டிகளில் வெற்றி.


அரூர் – டிசம்பர் 10

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் விளையாட்டு போட்டியில் சுமார் 450 மாணவர்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்.


பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, நடைபெற்ற 5 கிலோமீட்டர் ஓட்டப் போட்டியில் ஐந்தாம் இடம் பிடித்து சான்றிதழும் பதக்கமும் பெற்றார். இதனுடன், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற அரூர் பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் நல்லாசிரியர் பழனிதுரை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் ஆகியோரைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆறுமுகம், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies