Type Here to Get Search Results !

தென்மண்டல பல்கலைக்கழக வாலிபால் போட்டிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர் ஐ. ஹரிதரன் தேர்வு – முதல்வர் வாழ்த்து


தருமபுரி – டிசம்பர் 09

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டிகள் 01.12.2025 மற்றும் 02.12.2025 அன்று சேலம் ஏ.வி.எஸ் கல்லூரியில் நடைபெற்றன. இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாலிபால் அணியும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


பல்கலைக்கழக விளையாட்டுத் தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஐ. ஹரிதரன், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பங்கேற்க சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அவர் 10.12.2025 முதல் 14.12.2025 வரை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


தேர்வு கடிதத்தை மாணவர் ஹரிதரனுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் இன்று (09.12.2025) வழங்கி வாழ்த்து தெரிவித்தார். “கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள ஹரிதரன் மாநில அளவிலும், மண்டல அளவிலும் சிறந்து விளங்க வேண்டும்” என்று முதல்வர் வாழ்த்துரையாற்றினார். நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன், பேராசிரியர்கள், அரசியல் அறிவியல் துறை தலைவர் (பொறுப்பு) முனைவர் சபாபதி, அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு ஹரிதரனை வாழ்த்தினர்.

 

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies