Type Here to Get Search Results !

2025-ஆம் ஆண்டிற்கான “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – பரிந்துரைகள் வரவேற்பு.


தருமபுரி – டிசம்பர் 08

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கௌரவிக்கத் தமிழக அரசு 1995ஆம் ஆண்டு தொடங்கி வழங்கி வரும் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”க்கான பரிந்துரைகளை இந்த ஆண்டிற்கும் அரசு வரவேற்றுள்ளது.


சமூக நீதி, சமத்துவம், மனித உரிமை, புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் உயர்வு உள்ளிட்ட துறைகளில் சிறப்பு சேவை ஆற்றுபவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதில், ரூ.5,00,000/- (ஐந்து லட்சம்) விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதிச்சான்று வழங்கப்படுகின்றன. இவ்விருதாளரை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தேர்வு செய்வார்.


2025ஆம் ஆண்டிற்கான விருதுக்கான தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பத்துடன் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக செய்த பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 18.12.2025

இந்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies