Type Here to Get Search Results !

தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழுவின் ‘சேவை செம்மல் விருது 2025’ பெற்ற மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி – டிசம்பர் 07:

சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு சார்பில் மாநிலம் முழுவதும் தன்னலமின்றி மனிதநேயம் காக்கும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் ‘சேவை செம்மல் விருது 2025’ வழங்கும் நிகழ்ச்சி, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) ஜெகநாதன் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில், கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வரும் ‘மை தருமபுரி’ அமைப்பு இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த அமைப்பு தினந்தோறும் அன்னதானம் சேவை, ஆதரவற்றோரின் பிண உடல் நல்லடக்கம், இரத்த தானம், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான கூந்தல் தானம் விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகள் சேவை, சுற்றுச்சூழல் பணிகள், இயற்கை தேசம், பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூக நலப்பணிகளை செய்து வருகிறது.


மை தருமபுரி அமைப்பின் சிறப்பான மனிதநேயம் காக்கும் சேவைகளை பாராட்டும் விதமாக வழங்கப்பட்ட இவ்விருதினை, மின்சாரத்துறை தலைவர், முன்னாள் சுகாதாரத் துறை தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,
சென்னை IIT இயக்குநர் பேராசிரியர் காமகோடி வீழிநாதன் ஆகியோரின் கரங்களால், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் சண்முகம், சையத் ஜாபர், பெற்றுக் கொண்டனர்.


தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் மற்றும் குழுவினருக்கு மை தருமபுரி அமைப்பினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies