Type Here to Get Search Results !

குளிக்காடு கிராமத்தில் பள்ளி கூட காணாத சிறுவர்கள் – அடிப்படை வசதிக்காக ஏங்கும் மக்கள்; “ஓட்டுக்காக மட்டுமே அரசியல்வாதிகள் வருகிறார்கள்” என குற்றச்சாட்டு.


தருமபுரி – டிசம்பர் 08:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த குளிக்காடு மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகள் இல்லாததால், மக்கள் தென்னை ஓலை, தார்பாய் போன்றவற்றால் குடிசை அமைத்து கடினமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.


மின்சாரம் இல்லாமல் இருளில் வாழும் மக்கள்.

இப்பகுதிக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருளில் வாழ்வதால் இரவு நேரங்களில் விஷப்பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் தாக்கும் அச்சத்துடன் மக்கள் அஞ்சி வாழ்ந்து வருகின்றனர்.


சாலை வசதி இன்றி மருத்துவ உதவிக்கே செல்ல முடியாத நிலை.

அவசரநிலைகளில் மருத்துவமனைக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், உயிர்க்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.


20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை.

இப்பகுதியில் ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால், 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுவரை பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தொழில்நுட்ப கல்வி வசதி செய்கிறோம் எனச் சொல்வதை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


குடிநீர் குழாய் சாக்கடையில்! – மாசடைந்த நீரைப் பருகும் மக்கள்.

இப்பகுதிக்கு ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் குழாய் சாக்கடை கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளதால், குழாய் பழுதடைந்த பகுதிகளின் காரணமாக சாக்கடை நீர் கலந்து குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இதனால், ஒவ்வாமை, தோல் நோய், விஷ காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


“ஓட்டுக்காக வந்த அரசியல்வாதிகள் பின்னர் காணமே இல்லை” – மக்களின் புகார்.

இப்பகுதி மக்கள் சாலை, குடிநீர், வீடு, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் எந்தத் திட்டங்களும் எங்கள் கிராமத்தை வந்தடைவதில்லை என்றும், “ஓட்டு கேட்க மட்டுமே அரசியல்வாதிகள் வருகிறார்கள்; அதன் பிறகு எங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.


இப்பகுதியின் குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வாதார வசதிகளை உடனடியாக ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies