Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டியில் த.வெ.க சார்பில் ரத்த தானம் சேவை – கடந்த மாதம் 60 பேருக்கு ரத்தம் வழங்கப்பட்டது.


தருமபுரி, டிசம்பர் 04:

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்த தானம் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் செயல்படும் WhatsApp நண்பர்கள் குழு மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் உடன் தகவல் கிடைத்தவுடன் ரத்த தானம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், விபத்தில் காயம் அடைந்தோர் உள்ளிட்டோர் மருத்துவ ரீதியாக ரத்தம் தேவைப்படும் சூழ்நிலையில், தாவெகா நண்பர்கள் குழு உடனடியாக முன்வந்து உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 60 நபர்களுக்கு ரத்தம் வழங்கப்பட்டதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த மனிதநேயச் சேவைக்கு பாப்பாரப்பட்டி பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies