Type Here to Get Search Results !

தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி தாயார் முதல் ஆண்டு நினைவு நாள் – 1000 பேருக்கு அன்னதானம் & நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, டிசம்பர் 04:

தருமபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி அவர்களின் தாயார் ராஜம்மாள் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி அன்னசாகரம் எம்.ஜி.ஆர் திடலில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்பட்டன.


நிகழ்ச்சியில் தருமபுரி மாநகராட்சித் தலைவர் எஸ். ஆர். வெற்றிவேல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ராஜம்மாளின் நினைவைக் கௌரவித்தார். அத்துடன், அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies