Type Here to Get Search Results !

கடத்தூரில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்; நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுசரிப்பு.


தருமபுரி – டிசம்பர் 06 :

இந்திய அரசியல் சாசனத்தைக் கொடுத்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கடத்தூரில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.


நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி அர்ச்சனா முன்னிலை வகித்தார். கையூட்டு & ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா. ஜெபசிங் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு சிலம்பரசன், திரு தமிழருவி, திருமதி பாப்பாத்தி, திரு வினோத் குமார், திரு சின்னசாமி, திரு ஹரிகிருஷ்ணன், உள்ளிட்ட பலர், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சமூக நீதி, சமத்துவம், கல்வி உரிமை, அரசியல் சாசன மாற்றம் உள்ளிட்ட அம்பேத்கர் கொள்கைகள் குறித்து பேசப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies