தருமபுரி, டிச.15:
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு வாகனம் (TN 09 G 1289) முதிர்ந்த நிலையில் இருப்பதால் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இந்த வாகனம், வரும் 20.12.2025 அன்று முற்பகல் 10.00 மணியளவில், தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3-வது தளம், இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பொது ஏலமாக விடப்படவுள்ளது.
மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், நேரில் ஆஜராகி ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)