Type Here to Get Search Results !

தருமபுரியில் காவல் துறை பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் 88 மனுக்களுக்கு உடனடி தீர்வு; மேலும் 44 புதிய மனுக்கள் பெறப்பட்டன.


தருமபுரி, டிச.17:

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (17.12.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இம்முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், B.Com., BL., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. N. பாலசுப்பிரமணியம் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K. ஸ்ரீதரன் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


பெட்டிஷன் மேளாவில் பொதுமக்கள் அளித்த 88 மனுக்கள் மீது நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு, அனைத்துக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், இன்றைய தினம் புதிதாக 44 மனுக்கள் பெறப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் நோக்கில் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies