Type Here to Get Search Results !

பஸ் ஸ்டாண்டில் கிடந்த ₹300 பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த மாணவன் – காவலர் பாராட்டி பரிசளித்தார்.


பென்னாகரம், டிச. 05 -

பென்னாகரம் பகுதிக்கு அருகே வசிக்கும், மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் ₹300 பணம் கீழே கிடந்ததை பார்த்து அதை தனக்காக வைத்துக்கொள்ளாமல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அவர்களிடம் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளார்.


காவலர் முருகன் அங்கு விசாரணை செய்தபோது, யாரும் பணம் தொலைந்ததாக தெரிவிக்காததை அறிந்தார். மாணவனின் நேர்மை, நெறிமுறை, பொறுப்புடன் நடந்துகொண்டுறை காவலரை பெரிதும் கவர்ந்தது. இதனை பாராட்டிய தலைமை காவலர் முருகன் மாணவன் ஒப்படைத்த ₹300, காவலர் தனது பணத்தில் இருந்து வழங்கிய ₹100 மொத்தம் ₹400 ஐ அப்பள்ளி மாணவனுக்குத் திருப்பிக் கொடுத்தார். அப்போது, “யாராவது பணத்தைத் தேடி வந்து கேட்டால், நான் அவர்களுக்கு என் பணத்திலேயே கொடுத்து விடுகிறேன்” என்று கூறி மாணவனை வாழ்த்தி அனுப்பிவைத்தார்.


இந்த சம்பவம், மாணவர்களிடையே நேர்மை மற்றும் பொது நெறிமுறையின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies