இதனுடன், நகரில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் முன்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனங்கள் கேணல் வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பள்ளி வாகனங்கள் வரும் நேரங்களில் நெரிசல் மேலும் அதிகரித்து, போக்குவரத்து மணிக்கணக்கில் பாதிக்கப்படுகிறது. இதனால் அவசர ஊர்திகள் விரைவாக நகர முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
நகரில் போக்குவரத்து காவலர்கள் குறைவாக உள்ளதாலும், முக்கிய சந்திப்புகள் மற்றும் நெரிசல் பகுதிகளில் கண்காணிப்பு இல்லாததாலும் தினசரி போக்குவரத்து நெரிசல் தீராத சிக்கலாகியுள்ளது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் டிராப்பிக் போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)