Type Here to Get Search Results !

“தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின்கீழ் அரிய வாய்ப்பு: பழங்குடியினர் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம்.


தருமபுரி, நவம்பர் 5:

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தவுள்ளது.

அரசின் முக்கியத் திட்டமான “தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த அரிய முகாம், பழங்குடியினர் இளைஞர்களுக்கு தொழில்முறை திறன்களை கற்றுக்கொள்வதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையிலும் சிறந்த வாய்ப்பாகும் என்று பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.


இந்த முகாம் 2025 நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று சேலம் மாவட்டம், மல்லூரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். முகாமில் ஜெர்மன் மொழி பயிற்சி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள் (Allied Health Courses), மற்றும் டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் போன்ற சர்வதேசத் தரத்திலான மதிப்புமிக்க பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இம்முகாமில் பங்கேற்க 18 முதல் 33 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தகுதி பெற்றவர்கள் ஆவர். பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் அதிகபட்ச கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வர வேண்டும்.


முகாமில் பங்கேற்க விரும்பும் பழங்குடியினர் இளைஞர்கள் உடனடியாக
👉 https://forms.gle/1JwnHdFLDhmgvTiS8 என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 9790574437 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பழங்குடியினர் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies