📘 தகுதி நிபந்தனைகள்
-
மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது
-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட வருமானச் சான்றிதழ் அளிக்கலாம்.
-
GRE, GMAT, SAT போன்ற தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
-
IELTS / TOEFL போன்ற மொழித் திறன் தேர்வுகள் மட்டுமே அடிப்படையாக இருந்தால் இது பொருந்தாது.
💰 நிதி உதவி விவரம்
-
ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.15,00,000/- வரை கடன் வழங்கப்படும்.
-
இதில் 85% தொகை தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம், புதுதில்லி மூலமாகவும்,மீதமுள்ள 15% (அதாவது ரூ.2.25 இலட்சம் வரை) தமிழ்நாடு அரசு மூலமாகவும் வழங்கப்படும்.
📋 கடன் விவரங்கள் மற்றும் நிபந்தனைகள்
-
கடன் தொகை சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், ஆய்வகக் கட்டணம், உண்டி, உறையிடம் கட்டணம் மற்றும் காப்பீடு கட்டணங்களையும் உள்ளடக்கியது.
-
கட்டணங்கள் செமஸ்டர் அல்லது அரையாண்டு அடிப்படையில் விடுவிக்கப்படும்.
-
முந்தைய ஆண்டு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக கடன் விடுவிக்கப்படும்.
-
வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை.
💸 வட்டி மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள்
-
வட்டி விகிதம்: ஆண்டிற்கு 8%
-
தடைக்காலம்: 5 ஆண்டுகள் (கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து)
-
மொத்த திருப்பிச் செலுத்தும் காலம்: 10 ஆண்டுகள் (5 ஆண்டு தடைக்காலம் உட்பட)
-
முன்கூட்டியே கடன் திருப்பிச் செலுத்தலாம்; அதற்கான கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.
📝 விண்ணப்பிக்கும் முறை
-
விண்ணப்பப் படிவம்: www.tabcedco.tn.gov.in
-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லதுகூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது:
“தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் இந்த கல்விக் கடன் திட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் உயர்கல்வி பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.”
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)