Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.4.59 கோடி மதிப்பில் தூய்மை இந்தியா இயக்கம் பணிகள் நிறைவேற்றம்; மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, நவம்பர் 4:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், தூய்மை இந்தியா இயக்கம் (SBM 2.0) திட்டத்தின் கீழ் ரூ.4.59 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ்,

  • ரூ.52.98 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி,

  • ரூ.306.00 இலட்சம் மதிப்பீட்டில் நகராட்சி உரக்கிடங்குகளில் Bio-Mining முறையில் குப்பைகள் அகற்றும் பணி,

  • ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் மீட்பு கூடம் (MRF) அமைக்கும் பணி,

  • ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் STP-யில் (Decanting Facility) கட்டுமான பணி ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.


இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.

– செய்தி: தகடூர்குரல் | தருமபுரி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies